தஞ்சாவூர், மே 25 –
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 545 மணிக்கு பொது மக்கள் கலெக்டரிடம் வழங்கினார்கள்
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டம் மானோஜிப்பட்டியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சந்திரா காதொலிக் கருவி வேண்டி மனுவினை விண்ணப்பித்ததை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உடனடியாக காதொலிக் கருவி வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சௌமியா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



