திருப்பூர், மே 25 –
திருப்பூர் மாவட்ட கலெக்டா் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டா் மனிஷ் தலைமை தாங்கினார். அவரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளா் சையத் மன்சூர் உசேன் மற்றும் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனா்.
அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட 36வது வார்டு சூசையாபுரம் (ஜெய்வாபாய் பள்ளி ரோடு) மற்றும் 37 வது வார்டை சோ்ந்த (ராயபுரம் மெயின்ரோடு நஞ்சப்பா பள்ளி சாலை) ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையிலான 2 பிரதான சாலைகள் தனிநபா்களின் ஆதாயத்திற்காக தீண்டாமை சுவா் எழுப்பி அடைத்து வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பாதைகளாக இருந்தவை.
இந்த சுவரின் காரணமாக தாழ்த்தப்பட்ட அருந்ததியா் மற்றும் ஆதிதிராவிடா் மக்கள் குடியிருக்கும் சூசையாபுரம் பகுதியில் இருந்து ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு நேராக செல்ல வேண்டிய பள்ளி மாணவ மாணவிகள் 500 மீட்டா் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. எனவே இந்த தீண்டாமை சுவற்றை அகற்ற வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் உண்ணாவிரதம் மற்றும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவோம் என்றனா்.
இதில் மாநில இளைஞரணி செயலாளா் விஜயகுமார், தெற்கு மாவட்ட செயலாளா் மணிகண்ணன், வடக்கு மாவட்ட செயலாளா் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கண்ணன், காளியப்பன், மயில்சாமி, சுதாகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.



