துறையூர், மே 25 –
துறையூர் அருகே உள்ள கங்காணிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் 78 வயது மூதாட்டி செல்லம்மாள், கண் பார்வை குறைபாடு காரணமாக அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த துறையூர் தீயணைப்பு துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டனர். இந்த துயர சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



