தேனி, மே 22 –
தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் விடுபட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கான பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் ரூ.67 கோடி மதிப்பீட்டில் 53 கி.மீ. தூரத்திற்கு கழிவுநீர் குழாய் அமைத்தல், இயந்திரக் குழிகள் அமைத்தல், வீடுகளுக்கான கழிவுநீர் இணைப்புகள் அமைத்தல், மேலும் கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங்
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



