கிருஷ்ணகிரி, மே 20 –
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி பர்கூர் பேருந்து நிலையத்தில் அதிமுக அம்மா நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பர்கூர் எம்எல்ஏ இ.சி.கோவிந்தராசன் கலந்துகொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் கணேசன், முன்னாள் துணைத் தலைவர் ராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்னத்தம்பி, பழனி, சரவணன், பூபாலன், சின்னசாமி, சசிகுமார், ராஜேந்திரன், சக்திவேல், செல்வன், மனோகரன், வாசன் மற்றும் வெங்கடப்பன், ராஜசேகர், திம்மராயன், ரஞ்சித் குமார், பேட்டை ரவி சென்னப்பன், பெருமாள், ராஜ்குமார், செக்கில் நத்தம் கிளை செயலாளர் எம்.செல்வராஜ், கிருஷ்ணமூர்த்தி, கொய்யா குட்டி ராஜா உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கழக நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகளும், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



