புதுக்கடை, மே 19 –
புதுக்கடை அருகே வழுதூர் வடக்கு பகுதியை சேர்ந்தவர் ராமையன் மனைவி பொன்னேசம் (70). இவருக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உண்டு. இதில் 3 வது மகனான ஞானசேகர் (42) என்பவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஆஷா என்பவருடன் திருமணமாகி வீட்டில் வசித்து வருகின்றனர். ஞானசேகர் மஸ்கட்டில் வேலை பார்த்து, கடந்த 13ம் தேதி ஊருக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் ஞானசேகரின் மனைவி ஆஷா என்பவரின் தம்பி ஆஷிக் திருமணம் கடந்த 14ம் தேதி நடைபெற்றது. அதன் பின்பு கணவன் மனைவியான ஞானசேகருக்கும், ஆஷாவுக்கும் இடையே சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்பு நேற்று முன்தினம் குடும்பமாக மனைவி ஆஷா வீட்டிற்கு சென்று விட்டு நேற்று திரும்ப வீட்டிற்கு வந்தனர். அதன் பின்பு கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதை மனைவி ஆஷா தனது தாயார் வீட்டில் கூறியுள்ளார்.
அதன் பேரில் அங்கிருந்து ஆட்கள் நேற்று மாலை 06.00 மணி அளவில் புதுக்கடை பகுதி அனிஷ் (35), ஆஷிக் (28), ஜோஸ்பின் கலா (60), மார்த்தாண்டம் பம்மம் பகுதி கிளாடிஸ் (40) மற்றும் கண்டால் தெரியும் 4 பேர் சேர்ந்து ஞானசேகர் வீட்டுக்கு வந்து தகராறு செய்தனர். பின்னர் ஞானசேகரை அவரது மனைவியின் வீட்டில் இருந்து வந்த கும்பல் தாக்கினர். அப்பொழுது சண்டையை விலக்கி விட பொன்னேசம் முற்பட்ட போது மேற்படி நபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பொன்னேசம் சம்பவ இடத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக 108க்கு தகவல் தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 பணியாளர்கள் வந்து பார்க்கும் பொழுது பொன்னேசம் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
இந்த சண்டையில் ஞானசேகர் என்பவருக்கு உள்காயம் ஏற்பட்டதாக கூறி கருங்கல் தனியார் மருத்துவமனையில் சிகிட்சைக்கு சேர்ந்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்கடை போலீசார் மூதாட்டி உடலை குமரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணவர் ராமையன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் இறந்து போன நபருக்கு உடலில் வெளிக் காயங்கள் ஏதுமில்லை. இதனால் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் மூதாட்டி சாவு குறித்த விபரம் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.


