திருப்பூர், மே 18 –
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் வரும் 21ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து கடந்த 15 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் துரை வேலூ தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஜோதியுடன் புறப்பட்டனர். 15 ஆம் தேதி புறப்பட்ட ஜோதியானது மைசூர், சத்தியமங்கலம் வழியாக திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் வருகை தந்தது.
இந்நிலையில் ராஜீவ் காந்தி நினைவு ஜோதியினை திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கோபால்சாமி தலைமையில் வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து முக்கிய சாலைகளின் வழியாக ஜோதியுடன் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தியின் புகழைப் பாடும் வகையில் கோஷங்களை எழுப்பி ஊர்வலமாகச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் செந்தில் குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராமசாமி, வட்டார தலைவர் கருப்புசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கார்த்திக், ராமகிருஷ்ணன், கோவிந்தசாமி, வெங்கடேஷ், மகிளா, காங்கிரஸ் ஆஷா, வட்டாரம் பாலசுப்பிரமணி ரகுபதி, ஹரிச்சந்திரன், ஜெயராஜ், பழனிச்சாமி, பாஸ்கர், பாபு, யோகநாதன், ஜெயின்லாபுதீன், கோபு, விக்டோரியா, குமார், பாலசுப்பிரமணி, நட்ராஜ், கொண்டப்பன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மேலும் 200 காங்கிரஸ் மூவர்ண துண்டினை வழங்கினார்கள்.



