தஞ்சாவூர், ஏப்ரல் 24 –
தஞ்சாவூர் அருகே உள்ள மானோஜி பட்டிஅரசு பள்ளிவாக்கு சாவடியில் பந்தல் அமைக்காததால் கொளுத்திய வெயிலினால் வாக்காளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். குடை பிடித்தவாறும், துணிகளை முக்காடு போட்டுக் கொண்டும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
தஞ்சாவூரு அடுத்துள்ள மானோஜிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் மற்றும் 8 வாக்கு சாவடிகள் உள்ளன. இந்த வாக்கு சாவடிகளில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. காலையில் 7:00 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் வருகை அதிகரித்த வண்ணம் இருந்தன. நேரம் ஆக ஆக வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் வாக்காளர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆண்கள், பெண்கள் என வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
வழக்கமாக வாக்கு சாவடி முன்பு நிழல் குடை இல்லாத வாக்கு சாவடிகளில் சாமியான பந்தல் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த முறை இங்குள்ள வாக்கு சாவடிகள் முன்பு சாமியான பந்தல் எதுவும் அமைக்கப்படவில்லை. இதில் 4 வாக்கு சாவடிகள் முன்பு மரங்கள் இருந்ததால் வாக்காளர்கள் மரத்தின் கீழ் நிழலில் நின்று வாக்களித்தனர். ஆனால் பள்ளியில் மேல்பகுதி யில் உள்ள ஆண்கள், பெண்கள் பொது வாக்கு சாவடிகளில் நிழற் குடை இல்லை, சாமியான பந்தலும் அமைக்கப்படவில்லை. இதனால் வாக்காளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நேரம் ஆக ஆக வெயிலும் கொழுத்தியதால் வாக்காளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பல வாக்காளர்கள் குடை பிடித்துக் கொண்டும், சிலர் தாங்கள் வைத்திருந்த துண்டு, கைகுட்டை, சேலை, சுடிதார் துப்பட்டா போன்றவற்றை முக்காடு போட்டுக் கொண்டு நின்று வாக்களித்தனர்.
வயதான வாக்காளர்கள் வந்து வரிசையில் நின்று விட்டு அவர்களால் மேற்கொண்டு நிற்க முடியாததால் அருகில் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு மரத்தின் நிழலில் சென்று அமர்ந்து கொண்டனர். பின்னர் அவர்கள் வாக்களிக்க நேரம் அந்த பின்னர் எழுந்து சென்று வாக்கு அளித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.



