தேனி, மே 16 –
தேனி மாவட்டம், வீரபாண்டியில் அமைந்துள்ள அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வரும் சித்திரைப் பெருந்திருவிழாவையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பொதுமக்கள் பார்வைக்காக சிறப்புப் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கண்காட்சியில் தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள், மாவட்ட வளர்ச்சி பணிகள், சமூக விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் அரசுத் துறைகளின் சாதனைகள் தொடர்பான பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த சிறப்புப் புகைப்படக் கண்காட்சியினை தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் (15.05.2026) நேரில் சென்று பார்வையிட்டு, ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்கள் அதிக அளவில் கண்காட்சியை பார்வையிட்டு பயன்பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.



