பாரத நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மாவீரனுக்கு வீரவணக்கம்
ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்`(ஜவான்) திரு. முரளி நாயக்கின் தியாகத்தை போற்றி வணங்கும் வண்ணம் இராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக அம்மா பேரவை இணைச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், மாவட்டச் செயலாளர் முனியசாமி, மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருது பாண்டியன், அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜி. முனியசாமி, மகளிர் அணி செயலாளர் ஜெய்லானி சீனி கட்டி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சரவணகுமார், தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வீர வணக்கம் கோஷங்கள் எழுப்பினர்.



