மார்த்தாண்டம், மே 15 –
குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் குலசேகரம் பேருராட்சி முன்னாள் துணைத் தலைவராக இருந்து வந்தார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவருக்கு திருமணம் ஆகி விட்டது. இனைய மகன் சுஜித்குமார் (30). இவர் ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எல்எல்பி சட்டப் படிப்பு படித்து வந்தார்.
தற்போது இறுதி ஆண்டு தேர்வு எழுதிவிட்டு தனியார் பேருந்தில் ஊருக்கு வரும் போது, கடந்த 9ம் தேதி விழுப்புரம் மாவட்டம் தொண்டி ஆற்றுப்பாலத்தில் பஸ் வரும் போது முன்னாள் சென்ற கார் திடீரென பிரேக் பிடித்ததால் சொகுசு பேருந்தை டிரைவர் வலது பக்கம் திருப்பியுள்ளார்.
இதில் பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் 34 பயணிகள் இருந்தனர். ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழ்ந்தார். படுகாயம் அடைந்தவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிட்சை பெற்று வந்தனர். இதில் பயணம் செய்த சுஜித்குமார் படுகாயம் அடைந்து பாண்டிசேரி ஜிம்மர் ஆஸ்பத்திரியில் கடந்த ஒரு வாரமாக சிகிட்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு சிகிட்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சட்ட கல்லூரி மாணவர் சாலை விபத்தில் இறந்தது அந்த பகுதி மக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.



