ஈரோடு, மே 12 –
ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் , ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியம், நஞ்சை கொளாநல்லி ஊராட்சியில் 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் தூசு நீக்கும் இயந்திரத்தினைக் கொண்டு சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் உள்ள இதர தூசு மற்றும் குப்பைகளை அகற்றப்பட்டு வருவதையும், அதன் செயல்பாடுகளையும் குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கொடுமுடி ஊராட்சி ஒன்றியம். இச்சிப்பாளையத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் லட்சுமிபுரம் முதல் குமரப்பபுரம் வரை சாலையோரப் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதையும், அங்குள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விடும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் வள்ளி பள்ளி முதல் இச்சிப்பாளையம் எஸ்.பி.பி. கால்வாய் கரையோரப்பகுதியில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விடும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, கொடுமுடி பேரூராட்சி, மீனாட்சி ஹரன் நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தில் பராமரிக்கப்படும் அரசு போட்டித்தேர்வுகளுக்கான நூல்கள். பிற நூல்கள், தினசரி வருகை தரும் வாசகர்கள் மற்றும் அரசு தேர்வுகளுக்கு பயில்பவர்கள் விபரம், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கமணி. அம்புரூஸ், கொடுமுடி பேரூராட்சி செயல் அலுவலர் விஜயன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



