குளச்சல், மே 11 –
மணவாளக்குறிச்சி அருகே தலகுளம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மனைவி ஸ்ரீஜா குமாரி (30). இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (52) என்பவருக்கும் இடையே வழிப்பாதை பிரச்சனை இருந்து வருகிறது. கடந்த மாதம் 25ம் தேதி ரவி, பாபு ஆகியோர் பாதை அடைத்து முள்வேலி அமைத்ததாக தெரிகிறது. இதனை ஸ்ரீஜா குமாரி தடுத்ததா கூறப்படுகிறது. இது குறித்து மணவாள குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ரவிக்குமார் சொத்தில் கம்பி வேலி போடும்போது ஸ்ரீஜா குமாரி தாக்கியதாக வழக்கும் விசாரணையில் இருந்து வருகிறது. இது தவிர ரவிக்குமார் போட்ட கம்பிவேலியை அடித்து உடைத்ததாகவும் பாலசுப்பிரமணியம், கணபதி உட்பட 9 பேர் மீதும் வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. மேலும் கணபதி வீட்டுக்கு செல்லும் பாதையை அடைத்ததாக ஜேசிபி டிரைவர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனைகளால் அங்கு இருதரப்பினருடைய மோதல் ஏற்பட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சமரச தீர்வுக்காக ஆர்டிஓ விசாரணைக்காக மணவாளக்குறிச்சி போலீசார் ஸ்ரீஜா குமாரி, ரவிக்குமார் உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் விசாரணக்காக ஆர் டி ஓ முன்பு ஆஜராக வேண்டும். இதற்கான நாள், விவரம் அடங்கிய சம்மன் இவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


