தஞ்சாவூர், மே 9 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வில் மாநில அளவில் 97.19 சதவீதம் தேர்ச்சி 7வது இடத்தை பிடித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த தேர்வு 12,151 மாணவர்கள், 13,793 மாணவிகள் உட்பட மொத்தம் 25 ஆயிரத்து 944 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் மாணவர்கள் 11,670 பேரும், மாணவிகள் 13,545 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96.04, மாணவிகள் தேர்ச்சி விதம் 98.60. வழக்கம் போல் இந்த ஆண்டு மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 97.19 சதவீதமாகும். இதன் மூலம் தஞ்சாவூர் மாவட்டம் மாநில அளவில் 7வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2024-25 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 95.80 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 12வது இடத்தை பிடித்திருந்தது. தற்போது 5 இடங்கள் முன்னேறி 7வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


