திருச்சி, மே 9 –
துறையூர் காவல் ஆய்வாளர் ஓம்பிரகாஷ் தலைமையிலான போலீசார் கீரம்பூர் சமுதாயக் கூடம் அருகே அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கீரம்பூர் காந்தி நகரைச் சேர்ந்த சிங்கபெருமாள் (59) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சிங்கபெருமாள் ஏற்கனவே துறையூர் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.


