விளாத்திகுளம், மே 6 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தைச்சேர்ந்த முத்துமாரியப்பன் என்பவரின் மகன் கார்த்திக்குமார் (23). இவர் புதூர் – கம்பத்துப்பட்டி கிராமத்தில் 10ம் வகுப்பு பள்ளி படித்துவிட்டு விடுமுறையில் வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், இதனை அடுத்து அந்த சிறுமி பயத்தில் சத்தம் போட்டதாகவும், இதனால் கார்த்திக்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கார்த்திக் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



