திருப்பூர், மே 02 –
திருப்பூர் மாவட்டத்திற்கு பல ஊர்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். அதுபோக உள்ளூர்வாசிகளும் தினந்தோறும் டாக்டர் கலைஞர் மத்திய பேருந்து நிலையத்திற்கு அதிகப்படியாக வந்து செல்வதால் பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு செல்கிறார்கள். இந்த பேருந்து நிலையத்தை நிர்வாகக் கூடிய திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தன போக்கால் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீர் ஏற்பாடு செய்து கொடுக்காமல் நிர்வாகம் நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு திருப்பூர் சுற்றியுள்ள தாலுக்கா வாரியாகவும் மற்றும் கிராமங்களிலும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதிகளவில் பயணிகளுக்கு குடிநீர், வழங்கப்படாமல் இருப்பதால் குடிக்க குடிநீரின்றி மக்கள் கடும் அவதி அடைகின்றனர்.
குறிப்பாக பேருந்து நிலையம் உள்ளே எந்தப் பகுதியிலும் குடிநீர் வைக்கவில்லை என்று பயணிகள் குற்றச்சாட்டு. குழந்தைகள் முதியோர்கள் பெரியவர்கள் இவர்களுக்கு கூட குடிநீர் மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து வழங்கப்படுவதுமில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பலமுறை மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் குடிநீருக்காக, மக்கள் தினந்தோறும் பேருந்து நிலையத்தில் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த பேருந்து நிலையத்தில் குடிநீர் வழங்க திருப்பூர் மாநகராட்சி நிர்வாகமும் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



