திருச்சி, ஏப். 30 –
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட உண்டியலில் ரூ. 69 லட்சத்து 93 ஆயிரத்து 601 ரொக்கம், 78.900 கிராம் தங்கம், 840.200 கிராம் வெள்ளி மற்றும் 283 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் காணிக்கையாக கிடைத்தன. ஏப்ரல் மாதத்திற்கான இந்த காணிக்கைகளை எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.



