திருச்சி, ஏப். 29 –
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 5ம் நாளன்று சிவபெருமான் தாயாக மருத்துவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சியும், 6ம் நாளன்று சுவாமி – அம்பாளுக்குத் திருக்கல்யாணமும் நடைபெற்றது.
இன்று (ஏப்ரல் 29) 9ம் நாளன்று அதிகாலை சுவாமி – அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு செய்யப்பட்டு பெரிய தேரில் தாயுமான சுவாமி உடனுறை மட்டுவார் குழலம்மையும், சிறிய தேரில் தாயாரும் எழுந்தருளி மலைக்கோட்டை உள் வீதி வழியாக வலம் வந்தனர்.


