கோவை, ஏப். 20 –
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் என் எம் சுகுமார் சாமளாபுரம், எம்ஜிஆர் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் நேரில் சென்று சந்தித்தார். அப்போது மக்கள் இந்த பகுதியில் சுடுகாடு மைதானம், சமுதாயக்கூடம், மின்விளக்குகள் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்தனர். இவை அனைத்தும் தலைவர் இடத்தில் சொல்லி இந்த குறைகளை தீர்ப்பேன் என்று விசில் சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு பிரச்சாரம் மேற்கொண்டார். உடன் தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.



