மார்த்தாண்டம், ஏப். 20 –
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசீய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு நாகர்கோவில், வேர்கிளம்பி, மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.
தொடர்ந்து விளவங்கோடு தொகுதி பாஜக வேட்பாளர் விஜயதரணியை ஆதரித்து
மார்த்தாண்டம் பேருந்து நிலைய சந்திப்பில் சரத்குமார் நேற்று முன்தினம் இரவு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்: தமிழகத்தில் 5 வயது சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை பாலியல் பலாத்காரங்கள். மகளிருக்கு பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் எந்த வளர்ச்சியும் இது வரை நடக்கவில்லை. மோடி அரசின் வளர்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன.
தமிழகத்தில் நிதி இல்லை தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நிதி இல்லை, பகுதி நேர ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய நிதி இல்லை, சம வேலைக்கு சம உரிமை கொடுக்க நிதி இல்லை, மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு செய்ய நிதி இல்லை, நிதி இல்லை என்று சொல்கிறீர்கள். கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி ரூ. 11 லட்சம் கோடி தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்களுக்காக தந்திருக்கிறார். ஆனால் நீங்கள் தமிழகத்தின் கடனை ஐந்து கோடி அதிகரித்து இருக்கிறீர்கள். கடன் மேலும் மேலும் அதிகரித்து இருக்கிறீர்கள். திமுக அரசு தமிழகத்தை நீங்கள் வளர்சி பாதைக்கு எடுத்து செல்லவில்லை. ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. தமிழகம் எதை நோக்கி செல்கிறது? மகளிர் மசோதாவை தோற்கடித்து கொண்டிருக்கிறோம் என்று பெருமை தட்டி கொண்டிருக்கிறார்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வருவார். தேசிய ஜனநாயக கூட்டணி டபிள் என்ஜின் ஆக இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்டு மத்தியிலும், மாநிலத்திலும நல்லாட்சி அமைக்கப்பட்டு பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்றும் சரத்குமார் பேசினார்.



