வேப்பனப்பள்ளி, ஏப். 18 –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக பாத்தகோட்டா சீனிவாசன் தினமும் காலை முதல் இரவு வரை பல்வேறு கிராமங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றியத்தில் இன்று புதுக்கோட்டை, சின்னதீர்த்தம், பாலனப்பள்ளி, பதிமடுகு, சிகரலப்பள்ளி, தீர்த்தம், அலே குந்தாணி, சூரியனப்பள்ளி, நல்லூர், உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு தீவிர சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு கூடியிருந்த பெண்கள் அனைவரும் வேட்பாளர் சீனிவாசனுக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.
அப்போது பொதுமக்களிடம் பேசுகையில்: வேப்பனப்பள்ளி தொகுதியில் கடந்த ஐந்தாண்டுகளில் திமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகின்ற கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி தொகுதி மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் என்றும், எதிர்வரும் ஐந்தாண்டுகள் அரசின் நலத்திட்டங்களை விரைவாக பெற்றிட என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார். அப்போது தேமுதிக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


