மார்த்தாண்டம், ஏப். 2 –
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்றைய தினம் புனித வியாழன் தினத்தை கடைபிடித்தனர். இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு தேவாலயங்களிலும் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.
இந்த நிலையில் திக்குறிச்சி புனித கபிரியேல் தேவாலயத்தில் இயேசுவின் குருதி தியாகத்தை உணர்த்தும் வகையில் மருத்துவ தேவைக்காக ரத்த தான முகாம் நடைபெற்றது. பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர்கள் ரத்தம் சேகரித்தனர். திரளானோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.



