கன்னியாகுமரி, மார்ச் 25 –
கன்னியாகுமரி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டம் என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் விதிமுறைகளை மீறும் கனிமவள வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அவரின் உத்தரவின் படி கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து ஆய்வாளர் தலைமையிலான உதவி ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து போலீசார் நடத்திய வாகன சோதனையில், நேர கட்டுப்பாட்டை மீறியும், மது அருந்தியும், முறையான போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் வந்த கனிமவள வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.



