அருமனை, மார்ச் 20 –
ஆறுகாணி அருகே அணைமுகம் பகுதியில் மரம் முறிப்பதற்காக மின்கம்பிகள் அவிழ்த்து விடும் பணியில் களியல் மின்வாரிய ஊழியர் மகேஷ் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது திடீரென மின்கம்பம் உடைந்து கீழே விழுந்ததில் அவரது தலை அருகில் இருந்த சுவரில் மோதியதில் படுகாயம் அடைந்துள்ளார். உடனே அப்பகுதி மக்கள் அவரை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.



