திருவெண்ணெய்நல்லூர், மார்ச் 19 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் சுந்தர் ரெட்டியார் நகரை சேர்ந்தவர் ஆனந்தன் (45), விவசாயி. இவரது டிராக்டர் கடந்த 11-ந் தேதி இரவு வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த டிராக்டர் மற்றும் டிப்பரில் டிப்பரை மட்டும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து ஆனந்தன் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் திருவெண்ணெய்நல்லூர் அருகே சேத்தூர் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாராயணசாமி மகன் பாலமுருகன் (45), என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் டிப்பரை திருடியதை ஒப்புக்கொண்டதை அடுத்து டிப்பரை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



