தேனி, மார்ச் 18 –
தமிழக சட்டமன்ற பொது தேர்தல் – 2026 வருகின்ற ஏப்ரல் மாதம் 23 ந்தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
இதனால் தேர்தல் ஆணையம் சார்பில் 100% வாக்குப்பதிவு செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு 100% வாக்குப்பதிவினை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ரஞ்ஜீத்சிங் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணியின் போது மாணவர்கள் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் 100% வாக்குப்பதிவு பதிவு செய்யும் விதமாக விழிப்புணவு பாதகைகள் ஏந்தி ஊர்வலமாக தேனி பங்களா மேட்டில் அமைந்துள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் இருந்து தேனி நேரு சிலை வரை ஊர்வலமாக சென்றனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர், கல்லூரி மாணவ மாணவிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் ஏராளமான பங்கேற்றனர்.



