மார்த்தாண்டம், மார். 16 –
“உலகினை அழித்திடும் யுத்தம் வேண்டாம்” என்ற கோரிக்கையுடன் தமுஎகச வின் யுத்த எதிர்ப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் குழித்துறை சந்திப்பில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அருள்மனோ யுத்த எதிர்ப்பு பாடலோடு நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். மாவட்ட தலைவர் கவிஞர் தக்கலை ஹலீமா தலைமை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் ஜயகாந்தன் நிகழ்வை துவக்கி வைத்து பேசினார். தமுஎகச மாநில இணைபொதுச்செயலாளர் லட்சுமிகாந்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே எம் ஹசன், அருட்பணியாளர் ஜார்ஜ், இந்திய மாணவர் சங்கம் மாவட்ட இணை செயலாளர் சுபிக்ஷா ஆகியோர் போர் எதிர்ப்பு உரை நிகழ்த்தினர். சுஜாமி, முரளிதரன், விஜயகுமார் சிதறால், சுந்தரேசன், அட்லின் சுபினா, சாந்தகுமார், ரெஜிமோள், இருதய ராஜ், ரோஸ் ராபின், கலிங்கராஜபுரம் ஜெயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
யுத்த எதிர்ப்பு பாடல்களும், கவிதைகளும் இடம்பெற்ற நிகழ்வை தமுஎகச மாநில துணை பொதுச்செயலாளர் வேலாயுதம் நிறைவு செய்து பேசினார். மாணவர் வாலிபர் சங்க நிர்வாகிள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் திரண்டு நின்று யுத்தம் எதிர்ப்பு கோஷங்கள் முழக்கினர்.



