புதுக்கடை, மார்ச் 5 –
புதுக்கடை அருகே உள்ள தவிட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (65). கூலி தொழிலாளி. இவர் நேற்று தனது குடும்ப சொத்தில் உள்ள புளியமரத்தில் புளி பறிப்பதற்காக மரத்தில் ஏறி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தர்மராஜ் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கடை போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.


