மார்த்தாண்டம், பிப். 20 –
கன்னியாகுமரி மாவட்டம் கண்ணபுரத்தில் சத்திரபதி சிவாஜிக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அபிமன்யு சேவா டிரஸ்ட் சார்பில் சிலை அமைக்கப்பட்டது. சிலை அமைத்து 20 ஆண்டு விழாவை பிரதிஷ்டை விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு விழாவில் பாஜக மாவட்ட தலைவர் ஆர்.டி. சுரேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் தர்மராஜ், பாஜக சிறப்பு மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் மிஷா சோமன், குழிச்சல் செல்லன், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், பிரச்சாரக் மற்றும் பாஜக ஆர் எஸ், இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சத்திரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மலர்களால் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பாஜக மாவட்ட தலைவர் ஆர்.டி சுரேஷ் பேசும் போது: இந்து ராஜ்யம் அமைத்து தந்த பெருமை மிக்க வீர சிவாஜி தமிழ் நாட்டில் தஞ்சாவூரில் அவரது ஆட்சி இருந்தது. பண்டை காலங்களில் இந்தியா பொருளாதாரத்தில் மட்டும் அல்ல அனைத்திலும் முதல் இடத்தில் இருந்தது. இன்று நாம் முன்னேறி கொண்டு இருக்கிறோம். 2047ம் ஆண்டு உலகில் பொருளாதார வளர்ச்சியில் முதல் நாடாக இந்தியா மாறும் முழுமையான வளர்ச்சி அடைந்த பாரதத்தை காண இருக்கிறோம். வளரும் பாரதத்தில் இருந்து கொண்டு இருக்கிறோம் என்பதில் பெருமை என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் டிரஸ்ட் தலைவர் தினேஷ் குமார் அபிமன்யு, சேவா டிரஸ்ட் செயலாளர் சந்திர சேகர், மருதங்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் சேகர், துணை தலைவர் பைஜீ குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக தோட்டத்து மடம் கோயில் சமய வகுப்பு சார்பில் பஜனை நடைபெற்றது.



