கிருஷ்ணகிரி, பிப். 17 –
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர் அசோகன். பாரதிய ஜனதா கட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வந்த இவர் இரண்டு முறை பர்கூர் சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் ஒரு முறை சுயேட்சையாகவும் போட்டியிட்டுள்ளார்.
தற்போது பாரதிய ஜனதா கட்சியில் விவசாய அணியின் மாநில திட்டக்குழு பொறுப்பாளராக உள்ள இவர் அண்மை காலமாக பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாட்டினால் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அசோகன், பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தவெக கட்சியின் செயலாளர் முரளி விஜய் தலையில் தவெக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் முன்னிலையில் தவெக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியில் புதியதாக இணைந்த அசோகனுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றதோடு உடனடியாக தவெக கட்சி உறுப்பினர் அடையாள அட்டையினையும் செங்கோட்டையன் வழங்கினார்.



