மார்த்தாண்டம், பிப். 9 –
தேசிய ஜனநாயக கூட்டணி விளவங்கோடு தொகுதி பொறுப்பாளராக முன்னாள் எம் எல் ஏ விஜயதரணி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று களியக்காவிளை பகுதிக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணியில் மிக பெரிய விரிசல் விழுந்திருக்கிறதை நாம் பார்க்க முடியும். அந்தவகையில் திமுக காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று 90% காங்கிரஸ் மக்கள் கோரிக்கையை முன் வைத்து வருகிறார்கள்.
அந்த அடிப்படையில் திமுகவும் அதன் குழுவை அமைக்காமல் தற்போது கூட்டணியில் காங்கிரசை இணைக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற சர்ச்சையில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. ஆகையால் பிரிந்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
ராமதாஸ் அவர்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சொல்கிறார். ஆனால் கூட்டணிக்குள் ராமதாஸ் வருவார் என்றால் விடுதலை சிறுத்தை கட்சி வெளியில் செல்வோம் என்று மிக தெளிவாக சொல்லி இருக்கிறார். எனக்கு தெரிந்து ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்க வாய்ப்பு இல்லை. ஆகையால் ஒன்றில் ராமதாஸ் அந்த கூட்டணிக்குள் செல்லவேண்டும் இல்லெயென்றால் திருமாவளவன் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இணைந்து வலுபெற்ற கூட்டணியாக மாறி இருக்கிறது. இந்த கூட்டணி மிக பெரிய வெற்றியை காணும் என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை.
தமிழகத்தில் பெண்கள், சிறுவர்களுக்கான குற்றங்கள் அதிகரித்து இருக்கிறது. இன்றைக்கு திமுகவிற்கு எதிரான மனநிலையில் மக்கள் தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கிறார்கள். நிச்சயமாக எதிர்தரப்பில் உருவாக்கி இருக்கும் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளது. திட்டமே இல்லாத திமுக ஆட்சி அகற்ற பட வேண்டும். இரட்டை என்ஜின் சர்கார் என்று சொல்ல கூடிய மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமாக அமைய கூடிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.
கட்சி கூறும் தொகுதியில் போட்டியிட தயாராக இருக்கிறேன். யாரை பார்த்தும் பயப்பட வேண்டிய அவசியம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இல்லை. விஜய் பார்த்து பயப்பட தேவை இல்லை. அச்சுறுத்தும் இடத்திலும் அவர் இல்லை. யாரை பார்த்தும் யாரும் பயப்பட வேண்டிய தேவை இல்லை. ஜனநாயகத்தில் அரசியல் தளம் என்பது எல்லோருக்குமானது.
மஹா சிவாலய ஓட்டம் வரும் பக்தர்களுக்கு 12 கோவில்களிலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் மெத்தனமாக உள்ளது. திக்குறிச்சி நுழைவு வாயில் இருந்து கோவில் வளாகத்துக்குள் செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்கவிட்டல் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.



