கன்னியாகுமரி, பிப். 6 –
கன்னியாகுமரி அருகே பலவேசம் சேர்வைகார சாமி கோவில் திருப்பணி இன்று தொடங்கியது.
கன்னியாகுமரி அருகே தெற்கு குண்டல் முத்தாரம்மன் திருக்கோயிலுக்கு உட்பட்ட ஸ்ரீ பலவேசம் சேர்வைகாரன் சாமி கோவில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 200 ஆண்டுகள் பழமையான இக்கோவில் திருப்பணி இன்று தொடங்கியது.
ஊர் தலைவர் அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற திருப்பணி தொடக்க நிகழ்ச்சியில் சுயம்புலிங்கம், பாலகிருஷ்ணன், முருகன், ராஜமணி சங்குவர்ணபெருமாள், பால்துரை, கண்ணப்பன், தாணுமாலையன்நாடார், ராஜேந்திரன், முருகன், சி.எஸ்.சுபாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.



