நாகர்கோவில், பிப். 6 –
நாகர்கோவில் அடுத்த தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (47). இவர் நாகர்கோவில் மாநகராட்சியின் 52 வது வார்டு பாரதிய ஜனதா கவுன்சிலராக இருந்தார். நேற்று இரவு வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்தவர், திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு கீழே தவறி விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிட்சை பலனின்றி ரமேஷ் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரண நடத்தி, ரமேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாரதிய ஜனதா கவுன்சிலர் இறந்த தகவல் அறிந்ததும் அக்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள், நிர்வாகிகள் அங்கு திரண்டனர். மேலும் மாநகராட்சி மேயர் மகேஷ் அஞ்சலி செலுத்தினர். இறந்த ரமேஷுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.



