மார்த்தாண்டம், ஜன. 22 –
குழித்துறை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக களியக்காவிளை போலீஸ் எஸ்ஐ மகேந்த் என்பவருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் குழித்துறை பகுதி கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது காட்டு விளை பகுதி லதா (43) என்பவர் நடத்தி வரும் கடையில் சோதனை செய்தபோது அங்கு 50 புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்க வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு லதாவை போலீசார் கைது செய்தனர்.
இதை போன்று மார்த்தாண்டம் போலீஸ் எஸ்ஐ கிறிஸ்டல் விஜி மற்றும் போலீசார் சாங்கை பகுதியில் உள்ள கடையில் சோதனை செய்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரத்தினசாமி (62) என்பவர் கடையில் 32 புகையிலை பாக்கெட் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்து ரத்தினசாமியை போலீசார் கைது செய்தனர்.


