தக்கலை, ஜன. 16 –
தக்கலை அருகே கேரளபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜினோ (26). கொத்தனார். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வது வழக்கம். சம்பவ தினம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவர் வீட்டில் இருந்த அவரது தாயார் இடம் டிபன் கேட்டுள்ளார். ஆனால் தாயார் கொடுத்த டிபன் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு ஜினு வெளியே சென்றுள்ளார். சிறுது நேரம் கழித்து பார்த்த போது வீட்டின் உத்தரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தவர் தாயார் மற்றும் சகோதரர்கள் தூக்கில் இருந்து அவரை மீட்டு, சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பரிசோதித்த போது ஜினோ ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.
இது குறித்து தக்கலை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டு அவரது சகோதரர் ஜெனிஸ் என்பவரின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட ஜினோ ஏற்கனவே நான்கு முறை தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது.


