நாகர்கோவில், ஜன. 05 –
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் கன்னி சுதா என்ற பெண் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: விஜயகுமார் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என ரெஜிலாவை குடும்பத்தை சார்ந்தவர்களே அரளி விதையை குடிக்க தூண்டி இருக்கிறார்கள். அவர் விஷம் குடித்து இரண்டரை மணி நேரம் கழித்து தான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆம்புலன்சில் ஏறும் போது கூட விஜயகுமார் குடும்பத்தை பார்த்து பழி வாங்காமல் விட மாட்டோம் என கூறி சென்றுள்ளனர்.
ரெஜிலா உயிரிழந்ததை தொடர்ந்து விஜயகுமார் மட்டுமின்றி அவரது குடும்பத்தில் உள்ள அனைவரையும் சேர்த்து வழக்கு பதிவு செய்துள்ளனர். ரெஜிலாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம். நர்சிங் முடித்த ஒருவர் முதலுதவி சிகிச்சை அளிக்க செல்லும் போது கூட, ரெஜிலாவின் உறவினர்கள் சிலர் அதை தடுத்துள்ளனர். எனவே ரெஜிலா தற்கொலை வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என கூறி விஜயகுமார் சகோதரியுடன் உறவினர்கள் வந்து மனு அளித்து சென்றனர்.



