திருச்சி, மே 26 –
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள பெண் யானை அகிலாவுக்கு நேற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. 24வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள யானைக்கு பக்தர்கள் பழங்கள் கொடுத்து உபசரித்தனர். இந்த சிறப்பு பூஜையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கலந்துகொண்டார். 2011 டிசம்பர் 6 அன்று அசாம் மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அகிலாவுக்கு இந்த பெயர் சூட்டப்பட்டது.



