தக்கலை, டிச. 15 –
தக்கலை அருகே உள்ள புலியூர் குறிச்சி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி நாகர்கோவிலில் உள்ள மகளிர் பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வந்தார். நேற்று முன்தினம் 13ம் தேதி மதியம் சுமார் ஒரு மணியளவில் வீட்டின் படுக்கை அறைக்குள் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த பெற்றோர் அறையை உடைத்து சென்று பார்த்தபோது, அங்கு மாணவி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தக்கலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சென்று மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மாணவி தனது வீட்டு அருகில் உள்ள வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவ தினம் காதலனை சந்திக்க சென்ற போது, காதலன் மது அருந்திக் கொண்டிருந்தார். இதனால் அவருடன் கோபித்து தகராறு செய்து கொண்டு வீட்டுக்கு வந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


