நாகர்கோவில், ஜூலை 20 –
சாமிதோப்பு அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன் (33) மாற்றுத்திறனாளியான இவர் அந்தப் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். அவரது கடையில் தென்தாமரை குளம் போலீசார் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை அடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் மாவட்ட சிறையில் சபரிவர்மன் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் சபரிவர்மன் சிறையில் வைத்து அடித்து கொலை செய்யப்பட்டார். அவரை மூன்று சிறை வார்டன்கள், 8 கைதிகள் சேர்ந்து கை கால்களை கட்டி வைத்து கொடூரமாக தாக்கி கொலை செய்து செய்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறை வார்டன்களாக ஜெகன், சுரேஷ், சிவகுமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் நாகர்கோவில் சிறையில் வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட விசாரணை கைதிகளான விஷ்ணு, சாரதி, ஜெகன், சரத், பெருமாள், சேதுராம், அஜித், அரவிந்த் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர் கைது செய்யப்பட்டனர்.
வார்டன்கள் 3 பேரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு நான்குநேரி கிளை சிறை சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். இதற்கு இடையில் சவரிவர்மன் உடலை உறவினர்கள் 5 நாட்களுக்கு பிறகு பெற்றுக் கொண்டனர். சபரிவர்மன் கொலை வழக்கை விசாரிக்க ஏ டி எஸ் பி கலையரசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் சபரிவர்மன் குடும்பத்தினர் மற்றும் கைதாகி நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 8 கைகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சபரிவர்மன் கொலை தொடர்பாக பல முக்கிய தகவல்கள் தனிப்படை போலீசாருக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து கைதாகி இருக்கும் 8 கைதிகளையும் வேறு சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதன்படி அவர்கள் 8 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். அவர்கள் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.



