சங்கரன்கோவில். அக்.25.
திமுக பவள விழாவை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் சங்கரன்கோவிலில் நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில்,
திமு கழகத்தின் 75 வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட திமுக மற்றும் சென்னை கற்பக விநாயக மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் இலவச சிறப்பு சிகிச்சை முகாம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள வைஷ்ணவி மகாலில் வைத்து நாளை சனிக்கிழமை 26 ஆம் தேதி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 27ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது எனவும், இந்த முகாமில் பொது மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், சித்த மருத்துவம் ,குழந்தைகள் மருத்துவம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எலும்பு நோய் சிகிச்சை, இசிஜி பரிசோதனை, தோல் நோய் சிகிச்சை, எக்கோ சிகிச்சை, கண் நோய் மருத்துவம் ,எக்ஸ்ரே ,மகளிர் & மகப்பேறு மருத்துவம் ,ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக அளிக்கப்படும் எனவும் ,மேலும் சென்னை கற்பக விநாயக பல் மருத்துவக் கல்லூரி சார்பில் அனைத்து விதமான பல் சம்பந்தப்பட்ட சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது எனவும், மேலும் முகாமில் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது எனவும், முகாம் ஒருங்கிணைப்பு பணிகளை வடக்கு மாவட்ட மருத்துவர் அணியினர் செய்து வருகின்றனர் எனவும் ,இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் எனவும் , முகாமில் சிகிச்சை பெற வருபவர்கள் ஆதார் அட்டை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.



