By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராகுல் காந்தி எம்.பி. மீதான வழக்கை உடனே ரத்து செய்ய வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ராகுல் காந்தி எம்.பி. மீதான வழக்கை உடனே ரத்து செய்ய வேண்டும்
கனஂனியாகுமரிமாவட்டம்

ராகுல் காந்தி எம்.பி. மீதான வழக்கை உடனே ரத்து செய்ய வேண்டும்

Last updated: December 26, 2024 3:23 pm
December 26, 2024
71 Views
Share
SHARE

நாகர்கோவில் டிச 22

 

தமிழ்நாடு ராகுல்காந்தி பேரவை, மாநில தலைவர் நாஞ்சில் ரஜினிசெல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து பேசிய கருத்து இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரணி நடத்தினர். 

அப்போது இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் நடத்திய பேரணிக்கு போட்டியாக நாட்டை மோசமான பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி எம்பிக்கள் பாராளுமன்ற கட்டிட நுழைவு வாயில் அருகில் நின்று கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற காங்கிரஸ் கட்சி மற்றும் இந்திய கூட்டணி கட்சி எம்பிக்களை பாரதிய ஜனதா எம்பிக்கள் செல்லவிடாமல் தடுத்தனர்.அப்போது ஏற்பட்ட சம்பவத்தில் காயமடைந்த எம்பியைப் பார்க்கச் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர்  ராகுல் காந்தியை வழக்கில் சேர்த்து, அவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

ஒரு சம்பவம் நடைபெற்றால் அது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக பாராளுமன்ற வளாகத்தில் நடந்த இந்த சம்பவத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதிர்க்கட்சிகள் மீது அதிலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்  ராகுல் காந்தியின் மீது உடனே அவரது பெயரை வேண்டும் என்றே சேர்த்து வழக்கு பதிவு செய்வது பாரதிய ஜனதா கட்சியின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு மேலும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது. இந்தியாவின் பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்து மிகவும் அமைதியானவர், எளிமையானவர், பழகுவதற்கு பண்பானவர், என அனைத்து நாட்டின் தலைவர்கள், ஏழை எளிய மக்கள் என அனைவராலும் பாராட்டப்பட்டு வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது எந்த விசாரணையும் நடத்தாமல் வழக்கு பதிவு செய்து நாட்டின் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்திருப்பது காவி கட்சியின் கறை படிந்த நடவடிக்கைகளுக்கு மேலும் ஒரு படியாக அமைந்துள்ளது என்று தான் மக்கள் நினைக்கிறார்கள். மத்திய அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் பற்றி கூறிய கருத்து நாட்டையே போராட்ட களத்தில் தள்ளி உள்ள நிலையில் அதை திசை திருப்ப மத்திய அரசு  ஏவுதலின் பேரில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை பலிகடா ஆக்க முயற்சி செய்வது உண்மை சம்பவத்தை மறைத்து சோற்றுக்குள் முழு பூசணிக்காயை மறைக்க முயலும் முயற்சியாகவே பார்க்க முடிகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்டால் பிரச்சனை முடிந்துவிடும். அதை விடுத்து விட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியையும் இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்களையும் பழிவாங்க நினைத்து திசை திருப்ப முயற்சிப்பது பாரதிய ஜனதாவுக்கு தோல்வியையே கொடுக்கும்.நாட்டு மக்கள் அனைத்தையும் உற்று பார்த்து கொண்டு வருகிறார்கள்.ராகுல் காந்தி மீது இதற்கு முன்பு பாரதிய ஜனதா கொடுத்த நெருக்கடிகள் அனைத்தும் தோல்வில் தான் முடிந்திருக்கின்றன. இதுவும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு தோல்வியைத் தான் தேடித் தரும். எனவே சம்பவத்தை திசை திருப்பாமல் பாரதிய ஜனதா அரசு காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல் காந்தி மீது போடப்பட்ட வழக்கை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று

தமிழ்நாடு ராகுல்காந்தி பேரவை

சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ரயில்வேதுறை அமைச்சர்க்கு மயிலாடுதுறை மோடி கண்ணன் கடிதம்
துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி; பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
குமரி முழுவதும் சாரல் மழை
நாகர்கோவில் எவர்கிரீன் சார்பில் ரத்த தானம்
குமரியில் 8 இடங்களில் மறியல்; எம்.ஆர். காந்தி உட்பட 225 பாஜாவினர் மீது வழக்கு; கைதானவர்கள் நள்ளிரவில் விடுவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

போதை விழிப்புணர்வு கருத்தரங்கு

October 27, 2024
45 Views
கருங்கல் அருகே போலீசார் தாக்கியதில் மூதாட்டி இறந்ததாக குற்றச்சாட்டு; நீதிமன்ற உத்தரவின் படி இன்று பிரேதப் பரிசோதனை
முகவரி சான்றுக்கு அஞ்சலக அடையாள அட்டை
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்து
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account