நாகர்கோவில், டிசம்பர் 8 –
150 ஆண்டுகள் போராடி பெற்ற உரிமைகளை பறிக்கும் தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகர்கோவிலில் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்ல ஸ்வாமி தலைமை வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், மார்க்சிஸ்ட் லெனினினிஸ்ட் மாநில நிலை குழு உறுப்பினர் அந்தோணி முத்து, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட செயலாளர்கள் அல்காலித், மேசியா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டி, ஏ.ஐ.டி.யு. சி. மாநிலத் தலைவர் காசி விஸ்வநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்மண்டல அமைப்புச் செயலாளர் தமிழி னியன், சி.பி.ஐ. எம்.எல். மாவட்ட செயலாளர் சுசீலா, முன்னாள் எம்.எல்.ஏ. லீமா ரோஸ், முன்னாள் எம்.பி. பெல்லார்மின் உள்ளிட்டோரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.


