சென்னை: டிச. 02 –
சென்னை மாநகரில் பொதுமக்களின் அதிக நம்பிக்கையையும், ரியல் எஸ்டேட் தொழில்துறையில் பல விருதுகள் வென்ற கட்டுமான நிறுவனமான நவீன்’ஸ், வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்தி சீராக்க உதவ சென்னை மாநகர காவல்துறைக்கு 50 தடை அரண்களை அன்பளிப்பாக வழங்கியிருக்கிறது. சைதாப்பேட்டை பகுதிக்கான போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் பி. ராதாகிருஷ்ணன், இவற்றைப் பெற்றுக்கொண்டார். இந்நிறுவனத்தின் சமூகப் பொறுப்புறுதி திட்டத்தின் ஒரு பகுதியாக நவீன்’ஸ் – ன் நிர்வாக இயக்குனர் நவீன்குமார், இந்த தடையரண்களை காவல்துறையிடம் வழங்கினார்.
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கின்ற தேனாம்பேட்டையிலிருந்து, அண்ணாசாலை வரையிலான பகுதியில் இந்த தடையரண்கள் வைக்கப்படும். வாகனப் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி, சீராக்க உதவவும் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தவும் நவீன்’ஸ் வழங்கியிருக்கும் இந்த போக்குவரத்து தடையரண்கள் உதவும். முக்கிய சந்திப்புகளிலும், அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள அமைவிடங்களிலும், வாகனங்களின் வேகமான இயக்கத்தை கட்டுப்படுத்தவும் பாதை வழிகளின் ஒழுங்கு பின்பற்றப்படுவதை மேம்படுத்தவும், சாலை விபத்துகள் நிகழாமல் தடுக்கவும் இந்த தடையரண்கள் வைக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் விவரித்தனர்.
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான நவீன்’ஸ் – ன் சமூக பொறுப்புறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் இந்த ஆதரவானது, இம்மாநகரின் தினசரி போக்குவரத்து மேலாண்மைக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும் மற்றும் பாதுகாப்பாக சாலைகளில் பயணிப்பது மீது பொதுமக்களின் விழிப்புணர்வை மேலும் மேம்படுத்தும் என்று அவர்கள் கூறினர். நவீன்’ஸ் நிறுவனத்தின் இந்த பங்களிப்பிற்காக தங்களது மகிழ்ச்சியையும், பாராட்டையும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இம்மாநகரில் விபத்துகளற்ற, நேர்த்தியான போக்குவரத்தையும், சாலை பாதுகாப்பையும் மேம்படுத்துவதில் இத்தகைய முன்னெடுப்பு நடவடிக்கைகள் ஒரு முக்கிய பங்காற்றும் என்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர். தரமான குடியிருப்பு வளாகங்களை உருவாக்குவதில் புகழ்பெற்றிருக்கும் நவீன்’ஸ், சமூகத்தின் மீது கொண்டிருக்கின்ற அக்கறையால் இதுபோன்ற சமூகநல திட்டங்களை தமது கார்ப்பரேட் சமூகப் பொறுப்புறுதி முன்னெடுப்பின் ஒரு பகுதியாக செயல்படுத்தி வருகிறது.



