புதுக்கடை, நவ. 21 —
நவம்பர் 21ம் தேதி உலக மீனவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு குமரி மாவட்ட மீனவ காங்கிரஸ் சார்பில் தேங்காபட்டணம் அருகே ராமன்துறை மீனவர் கிராமத்தில் மீனவர் தின விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான் தலைமை வகித்தார். குமரி மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் அந்தோணி பிச்சை, இனயம்புத்தன் துறை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகித்தனர். இது தொடர்ந்து கடலில் பால் ஊற்றி, மலர் தூவி கடல் தாய்க்கு வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் விஜய் வசந்த் எம் பி, ராஜேஷ்குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 100 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங், மாநில காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஆஸ்கர் பிரடி, துணைத் தலைவர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் லைலா ரவிசங்கர், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் ரத்தினகுமார், மாநில மீனவர் காங்கிரஸ் செயலாளர்கள் ஜேம்ஸ், ராஜ் உட்பட ஏராளமானார் கலந்து கொண்டனர்.



