உதகை, நவம்பர் 24 –
நீலகிரி மாவட்டம் உதகை நகரில் நகராட்சிக்கு உட்பட்ட 33 வது வார்டு நொண்டி மேட்டியில் இருந்து உதகை நகருக்கு செல்லும் சாலை தனி நபர் ஆக்கிரமிப்பு. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.
இந்த சாலையானது 15 அடி அகலம் கொண்டது என்று அப்பகுதி மக்களால் சொல்லப்படுகிறது. இதனை ஒரு தனி நபரால் பாதி அளவிற்கு வேலி அடைத்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக கவனத்தில் கொண்டு சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதையை சீர் செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



