By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு விரைவில் திறப்பு; அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு விரைவில் திறப்பு; அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்
தஞ்சாவூர்தமிழ்நாடுமருத்துவம்

தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு விரைவில் திறப்பு; அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்

Last updated: November 18, 2025 5:40 pm
November 18, 2025
37 Views
Share
SHARE

தஞ்சாவூர், நவம்பர் 18 –

தஞ்சாவூர் அரசுராசா மிராசுதார் மருத்துவமனையில் ரூபாய் 12 கோடியில் கட்டப்பட்ட 100 படுக்கை வசதிகளுடன் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு விரைவில் திறக்கப்பட உள்ளது என்று அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறினார்.

தஞ்சாவூரை அடுத்துள்ள தென்னங்குடி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 2 கோடியே 50 லட்சத்து ஒன்றாவது பயனாளிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் மருந்து பெட்டகத்தை வழங்கினார். தென்னங்குடி ஊராட்சியில் ரூபாய் 1.40 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், ஒரத்தநாடு தாலுக்கா ரூபாய் 1.27 கோடி செலவில் வாண்டையார் இருப்பு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம், வடக்கூரில் ரூபாய் 60 லட்சம் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தையும் அமைச்சர் மா சுப்பிரமணியம் திறந்து வைத்தார்.

பின்னர் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட மகப் பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு கொண்ட தாய் சேய் நலப் பிரிவு மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை மைய பிரிவினை யும் அமைச்சர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கோவி. செழியன், முரசொலி எம்பி, எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம்,மேயர் சண்.ராம நாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் செந்தில்குமார் ,மாவட்ட சுகாதார அலுவலக கலைவாணி, துணை இயக்குனர் மாதவி குணசீலன், மாநகர்நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடை கோடி மனிதர்களுக்கும் மருத்துவ சேவையை முழுமையாக கொண்டு சேர்க்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் தொடங்கப்பட்டது. அதன்படி ஒரு திட்டம் தொடங்கிய பிறகு அந்தத் திட்டம் மக்களுக்கு தொடர்ச்சியாக செல்கிறதா? என ஆய்வு செய்வதில் நமது முதலமைச்சருக்கு நிகர் அவர் தான். 2 கோடி பயனாளர்களை கடந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி அமெரிக்காவில் நடந்த ஐநா சபை கூட்டத்தின் போது, உலகில் தொற்ற நோய்களுக்கான மருந்துகள் தருவதில், தடுப்பதில், எந்த நாடு சிறந்து விளங்குகிறது என்பதை அவர்கள் ஆய்வு செய்தபோது இந்தியாவில் தமிழகம் தான் என கண்டறியப்பட்டு விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பினால் 2012 ஆம் ஆண்டு 66 பேரும், 2017 ஆம் ஆண்டில் 65 பேரும் உயிரிழந்தார்கள். இதுதான் இந்தியாவிலேயே டெங்கு பாதிப்பினால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட ஆண்டு. இந்த 2 ஆண்டுகளிலும் ஆட்சியில் இருந்தது அதிமுக தான். கடந்த 11 மாதங்களில் வெறும் 9 பேர் மட்டுமே டெங்கு பாதிப்பால் இறந்துள்ளனர். திமுக பொறுப்பேற்ற 4 1/2 ஆண்டுகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தான் டெங்கு பாதிப்பு உயிரிழப்புகள் உள்ளன.

தஞ்சாவூர் அரசு ராசாமிராசுதார் மருத்துவமனையில் கடந்த 2023 ஆம் ஆண்டு 100 படுக்கை வசதி கொண்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கொண்ட தாய், சேய் நல்ல பிரிவு மற்றும் புதிய புறநோயாளிகள் பிரிவு கட்டப்பட்டது . இதில் ரூபாய் 10 கோடிக்கு கட்டிட மும், ரூபாய் 2 கோடிக்கு மருத்துவ உபகரணங்களும் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் 3 வாரங்களில் நிறைவடைந்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதலமைச்சர் திறந்து வைப்பார் இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் அருகே பிளஸ் 1 மாணவி பலாத்காரம்: இசை கலைஞர் மீது வழக்கு
நாகர்கோவிலில் சூரிய ஒளி கதிர்கள் நேரடியாக படும் அளவில் திறந்த வாகனங்களில் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
குளச்சல் நகர அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
தேமுதிக திமுகவுடன் இணைந்ததை அடுத்து கிருஷ்ணகிரியில் தேமுதிகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
தருமபுரி அருகே குடிநீர் குழாயை சரி செய்து குடிநீர் வழங்க வேண்டுமென்று கூறி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்திருப்பூர்மாவட்டம்

திமுக நல்லூர் முன்னாள் பகுதி கழகச் செயலாளர் பிறந்தநாள் வாழ்த்து

May 14, 2025
52 Views
ஓட்டல் விடுதிகள் மற்றும் உணவகங்களின் செயல்பாடுகள்
சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
மார்த்தாண்டத்தில் லாரி பைக்கில் மோதி வாலிபர் உயிரிழப்பு; நண்பருக்கு தீவிர சிகிச்சை
சிவகங்கை மாவட்ட அறங்காவலரிடம் குடமுழுக்கு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account