களியக்காவிளை, நவ. 18 –
சபரிமலை புனித யாத்திரை மேற்கொள்ளும் தமிழக பக்தா்களுக்கு உதவுவதற்காக அறநிலையத் துறை சார்பில் தமிழக எல்லையான களியக்காவிளையில் அமைக்கப்பட்ட சிறப்பு தகவல் மையம் திறக்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களிலிருந்தும் சபரிமலைக்கு மண்டல, மகரவிளக்கு பூஜை காலங்களில் செல்லும் ஐயப்ப பக்தா்கள் பெரும்பாலானோர் கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை வழியாக சென்று வருகின்றனா். இதே போன்று குமுளி, புளியரை பகுதி வழியாகவும் சபரிமலைக்கு செல்கிறார்கள். இந்நிலையில் களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் சிறப்பு தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை குழித்துறை தேவஸ்வம் கண்காணிப்பாளர் சிவகுமார் சனிக்கிழமை திறந்து வைத்தார்.
இங்கு, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் அறநிலையத் துறையைச் சோ்ந்த பணியாளா்கள் 4 பேர் நியமிக்கப்பட்டு, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மையம் 2026 ஜனவரி 20 ஆம் தேதிவரை செயல்படும் என இந்து சமய அறநிலையத்துறை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் அதிகாரி தெரிவித்துள்ளார்.



