சென்னை, நவ. 14 –
அக்டோபர் 27, 2025 அன்று, எஸ்.ஆர்.எம் ஹோட்டல் நிர்வாகம் ரூ.20 கோடி செலுத்தத் தயாராக இருந்த நிலையில், அக்டோபர் 5, 2025 அன்று உச்சநீதிமன்றத்தில் மனு மூலம் தெளிவுபடுத்தக் கோரியது. எஸ்.ஆர்.எம் திருச்சி ஹோட்டல் ஏற்கனவே 7 கோடி ரூபாயை செலுத்தியுள்ளதால் மீதமுள்ள 13 கோடி ரூபாயை செலுத்த வேண்டுமா மற்றும் 13 கோடி ரூபாயை உச்ச நீதிமன்ற பதிவேட்டின் பெயரில் வைப்புத்தொகையாக செலுத்த முடியுமா என்றும் மனுவில் கோரப்பட்டது.
உச்ச நீதிமன்றம் இந்த மனுவை அக்டோபர் 14, 2025 அன்று ஏற்றுக்கொண்டு, அக்டோபர் 27, 2025 அன்று விசாரணைக்கு பட்டியலிட்டது. ஆனால் அக்டோபர் 22, 2025 அன்று, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் திருச்சியில் உள்ள எஸ்.ஆர். எம் ஹோட்டலை, நீதிமன்ற உத்தரவு இல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போதிலும் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தியது.
அக்டோபர் 27, 2025 அன்று உச்சநீதிமன்றம் திருச்சி எஸ்.ஆர். எம் ஹோட்டல் வழக்கில் இரண்டு நீதிபதிகள் அமர்வில் மூத்த வழக்கறிஞர் சையத் அகமது சவுத் சமர்ப்பித்த ஆதாரங்களான தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வலுக்கட்டாயமாக கையகப்படுத்திய காட்சி புகைப்படங்கள் ஆகியவற்றை ஆராயாமலே மனுவை தள்ளுபடி செய்ததாக உத்தரவிட்டது. இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் சையத் அகமது சவுத் ஒரு மறுஆய்வு மனுவை (Review Petition) உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.



