சங்கரன்கோவில், நவ. 8 –
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றியத்தில் சேர்ந்தமரம் அரசு மேல்நிலை பள்ளியில் தமிழக துனை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற தலைப்பில் 10 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு வழிகாட்டி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு தேர்வு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கி பேசியதாவது: இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் திராவிட மாடல் முதல்வர் கல்வி துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எனவே மாணவ, மாணவிகள் அரசின் கல்விக்கான திட்டங்களை பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் எனவும், இந்த பள்ளி உருவாக காரணமாக இருந்த பேராசிரியர் அய்யம்பெருமாள், நாட்டாமை சித்திரைக்கண்ணு, ஆசிரியர் ஜேம்ஸ், கம்யூனிஸ்ட் கட்சி குத்தாலிங்கம் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பேசினார்.
நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் கோமாரிராஜ், செல்லப்பா, ஜெயராஜ், வெளியப்பன், சீனிவாசன், ராஜேந்திரன், சார்லஸ், சரவணன், வெள்ளத்துரை, ராமர், கடற்கரைசாமி, பெல்ஸ் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



